எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 26 டிசம்பர், 2009

இசையால் வசமாகா இதயம் எது-?

  • இன்றைய சூழ்நிலையில் தானுண்டு தன் வேலை உண்டு என்று பெரும்பாலோர் உள்ளனர். (அவர்களில் நானும் ஒருவன் ) இயந்திரமாக வாழும் சூழல் தானாகவே அமைகிறது. இயந்திரத்தை மகிழ்ச்சி படுத்துவது மிகவும் எளிது, அதை தினமும் கவனித்தாலே போதும். ஆனால் மனிதனுக்கு-!...இந்த வேளையில் நம் மனதிற்கும் சில மகிழ்ச்சியை கொடுத்தால் எப்படி இருக்கும்...! நன்றாக தான் இருக்கும். அந்த மகிழ்ச்சியை எப்படி அணுகுவது-? சிலருக்கு மது, சிலருக்கு மாது, பலருக்கு புகை இழுத்தல், இப்படி போகும் பொது பலருக்கு பாடல்களில் மயக்கம் உண்டு.(எனக்கு கொஞ்சம் அதிகம்) உங்களுக்கு தெரிந்து இருக்கும் படலை பற்றிய பதிவு என்று . ஆம் பாடலை பாடதவர் குறைவு . இந்த இடத்தில் பாடல் என்பது முழுக்க முழுக்க சினிமா சம்பந்த பட்டதே. சினிமாவை பற்றிய கருத்துக்களை பலர் சொல்லி இருக்கிறார்கள்,அந்த பக்கம் போக வேண்டாம். இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்களின் பட்டியல் எதோ எனக்கு தெரிந்த அளவில் எழுதுகிறேன் ... அதை தொடர்ந்து எழுதவும் முயற்சி செய்கிறேன். 1.மன்மத லீலையை வென்றார் உண்டோ ...(படம்: ஹரிதாஸ்) 2.கடல் மேல் பிறக்க வைத்தான் எங்களை கண்ணீரில் (படகோட்டி) 3.அடி ஆடி வரும் பல்லாக்கு இது சாமி வரும் தூது (ஐ லவ் இந்தியா) 4 .என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னனின் பேரும் என்னடி எனக்கு சொல்லடி (உன்னை நினச்சேன் பட்டு படிச்சேன்) 5.ஒரு பொன் மானை நாம் காண தகதிமிதோம் (மைதிலி என்னை காதலி) 6.மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர ...(மௌன ராகம்) 7.ராசாவே உன்னை நம்பி (முதல் மரியாதை) 8.சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு (கோடி பறக்குது) 9 .அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே (மன்னன்) 10 .என் புருசன்தான் எனக்கு மட்டும் தான் (கோபுரங்கள் சாய்வதில்லை) அடுத்த பதிவில் தொடரலாம் என்று உள்ளேன் ... மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து அன்பு வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் *இன்னிசை பிரியன்*

வெள்ளி, 18 டிசம்பர், 2009

வெள்ளி கிழமை விடியும் வேலை...

நேயர்களே ...! விரோதி வருடம் மார்கழி மாதம் 3 ஆம் தேதி , டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி வெள்ளி கிழமை , காலை நன்றி கலந்த வணக்கத்தையும் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்களையும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் ... நேயர்களே...! உங்களது கல்யாண வீடுகள் கல கலக்க வேண்டுமா... புது மனை புதுவிழா பூத்து குலுங்க வேண்டுமா... பூப்புனித நீராட்டுவிழா புன்னகை பூக்க வேண்டுமா காதணிவிழா கல கலக்க வேண்டுமா... நாடுவீர் எங்களின் வலை பதிவு எழுத்தாளர்களை ... நேயர்களே...! கலைகளிலே சிறந்தது நாட்டிய கலை, கட்டிடங்களில் சிறந்தது தஞ்சை பெரிய கோவில், மலர்களில் சிறந்து ரோஜா, மனதில் சிறந்தது மல்லிகை,குளிக்க சிறந்தது குற்றாலம் (திருநெல்வேலி மாவட்டம்) பார்க்க சிறந்தது பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம்) அது போல் வலை பதிவுகளில் சிறந்தது ...? நேயர்களே...! கட்டான உடலுக்கு பட்டாடை உடுத்தி வரும் தென்னமரசிட்டு தேன்கவிதை மொட்டு , மக்கள் நாவரப்பாரட்டும் பதிவுலகின் ஹிட்டு...? அடுத்து வருவது என்னுடைய சிறுபதிவு... நன்றிவணக்கம் சிலருக்கு சில விசயம் பிடிக்கும் ... இப்போ facebook நு ஒன்னு இருக்கு அதுல யாராவது போட்டோ போட்டுட்டா போதுமப்பா ... comments குடுக்குறதுக்கு என்றே சிலர் இருப்பாங்க அதுல நானும் ஒருத்தன் என்பது வேற விசயம், அதுல பாத்திங்கன்னா, ஆண்களோட நண்பர்கள் வட்டத்தில பெண்கள் இருப்பாங்க , பெண்களோட நண்பர்கள் வட்டத்தில எல்லாமே ஆண்கள் தான் ... இவங்க பண்ற அட்டூழியம் இருக்கே...! யப்பா தாங்க முடியாது. என்னோட நண்பர்கள பாத்திங்கன்னா பாதிக்கு மேல பெண்கள் தான் . இந்த மாசம் கல்யாணம் ஏதும் நடத்த மாட்டங்க, அடுத்த மாதம் நிறைய கல்யாணம் வருது எல்லோரும் மகிழ்ச்சிய இருப்பாங்க ,நல்லது , இதுல இன்னொன்னு இருக்கு எல்லா கல்யாண போட்டோவும் facebook ல வந்துரும் ... எனக்கும் நல்ல பொழுது போகும், யாரோ நினைக்கிறாங்க இதல்லாம் ஒரு பொழப்பா இதுக்கு பதிலா வலைபதிவர்களுக்கு டீ வாங்கி குடுத்து பொழைக்கலாம் ...இன்னும் எழுதனும்னு நினைக்கிறேன் ஒன்னும் தோனல நாளைக்கு நல்லா யோசிச்சு ஒரு பதிவு போடுறேன் சரியா அது வரை உங்களிடமிருந்து அன்பு வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் sanjaykrishna

வியாழன், 17 டிசம்பர், 2009

காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு ...

தூது வந்த காகிதத்தை தூக்கிலிட்ட தூயவளே ...! தூது அனுப்பிய என்னை மட்டும் ... துடித்து அழவா விட்டு வைத்தாய்...? நிலவொளியில் நீரலைகள் நிர்வாணமாய் நீந்துவதை கரையில் நின்று ரசித்த கரு வேல மரம் போல... உன் வீட்டு கதவோரம் நான் நின்று உன் கட்டழகை ரசிக்க வேண்டும் ... வானத்திலிருந்து பூமி பார்க்க புறப்பட்ட சில மழை துளிகள் உன் வீட்டு மரத்தின் இலைகளிலும் கிளைகளிலும் தங்கின உன்னை பார்த்து விட்டு போகலாம் என்று ....

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்...

ஆயிரம் தான் கவி சொன்னேன்
அழகழகா பொய் சொன்னேன்
பெத்தவளே உன் பெருமை ஒத்த வரி சொல்லலையே
காத்தெல்லாம் மகன் பாட்டு, காகிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு, உன் கீர்த்தி எழுதலையே...!

எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி
எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ..?

வெள்ளையம்மாள் பெற்ற, வெள்ளி மலரே,
என்னை புறந்தள்ள வயிற்று வலி பொறுத்தவளே,
வைரமுத்து பிறக்கும்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல,
வயிற்றில் நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிடுச்சு !!!!

கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
இடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே!
கத்தி எடுப்பவனோ? களவாட பிறந்தவனோ ?
தரணி ஆள வந்த, தாசில்தார் இவன் தானோ ?
இந்த விவரங்க, எதோன்னும் தெரியாம,
நெஞ்சூட்டி வளத்த உன்ன, நெனச்சா அழுகை வரும் .

கத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,
கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,
தொண்டையில, அது இறங்கும் சுகமான இளம் சூடு,
மண்டையில இன்னும் மசமசன்னு நிக்குதம்மா.........

கொத்தமல்லி வறுத்து வச்சு, குறுமிளகாய் ரெண்டு வச்சு,
சீரகமும் சிறுமிளகும், சேத்து வச்சு நீர் தெளிச்சு.
கும்மி அரச்சி, நீ கொழ கொழன்னு வழிக்கயில,
அம்மி மணக்கும், அடுத்த தெரு மணமணக்கும்,

தித்திக்க சமச்சாலும், திட்டிகிட்டே சமச்சாலும்,
கத்திரிக்காயில் நெய் வழியும், கருவாட்டில் தேன் ஒழுகும்,
கோழி குழம்பு மேல, குட்டி குட்டியாய் மிதக்கும் தேங்காய் சில்லுக்கு,
தேகமெல்லாம் எச்சில் ஊரும்.....

பாசமுள்ள வேலையில, காசு பணம் கூடலையே,
காசு வந்த வேலையில பாசம் வந்து சேரலையே.....

அஞ்சாறு வருஷம் ஆச்சு , உன் ஆசை முகம் பாக்காம,
பிள்ளை மனம் பித்தாச்சே, பெத்த மனம் கல்லாச்சே.....

படிப்பு படிச்சிகிட்டே பணம் அனுப்பி வச்ச மகன்
கை விட மாட்டான்னு கடைசியில நம்பலையே
பாசம் கண்ணீரு பழைய கதை எல்லாமே
வெறிச்சோடி போன வேதாந்தம் ஆயிடுச்சே,

இன்னும் நான்கு மாதம் போன பின்பு நான் பார்பேன் என் தெய்வத்தை அது வரை பொறுக்க வேண்டும் என் மனமே...

கடவுள் ஏன் கல்லானார் ...?


திருவரங்கம் திருமண விபத்து பற்றிய துளிகள் ... மணமேடையை பிண மேடையாக்கிய இந்த "தீ"இக்கு அனுப்பியது யார்...? "திருமண அழைப்பிதழ்" பெண்ணொருத்தி கதறினாளாம் கரிக்கட்டையாய் கருகிய தன் கணவனை பார்த்து , மிச்சமிருந்த உயிரையும் வீசி எறிந்தாலாம் கைக்குட்டையாய் கசங்கி கிடந்த தன் குழந்தையை பார்த்து ... "மொய்" எழுத 'மை' இல்லாததாலோ உதிரம் தொட்டு எழுதியது இந்த நெருப்பு "பேனா" இவ்வளவு நடந்தும் திரும்பி கூட பார்க்க வில்லை இந்த "திருவரங்கத்து பெருமாள்"